நுரைச்சோலை மின் உற்பத்தியில் தற்காலிக தடை

31076 0

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் செயற்பாடு இன்று (26) காலை முதல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

ஒரு மின்பிறப்பாக்கி மட்டுமே தற்பொழுது செயற்பாட்டில் உள்ளதாகவும் தேசிய மின் கட்டமைப்புக்கு 200 மெகாவோட் மின்சாரம் இதனால் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் சபை தெரிவித்துள்ளது.

இவற்றின் திருத்தப் பணிகள் ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் எனவும் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment